புதன், 25 ஆகஸ்ட், 2010

விபத்து


நீ சாலையை கடக்கும் போது


உன் அழகைக்கண்டு


பேருந்து உன்னை என்னிடம்


இருந்து பறித்து தனக்கு


சொந்தமாக்கிக்கொண்டதோ?!!!!


செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

படைத்தான் பிரம்மன் உன்னை...

பிரம்மன் படைப்பில்

உன் இரு இதழ்களை மட்டும்

ஏன் வில்லாக படைத்தான்

வாலிபர்களின் இதயத்தில்

அம்பு எய்வதற்கா?


வில் வித்தையில் சிறந்தவன்

அர்ச்சுனன் ...அந்த

அர்ச்சுனன் உன்னை பார்த்தால்

உன் இதழ்களை வில்லாக எடுத்து

உன் கண்களை மீணாக நினைத்து

அம்பு எய்திருப்பான்....

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

காதலன் இங்கே ...காதலி அங்கே...

காதலன் இங்கே ...காதலி அங்கே...

என் வீட்டார் வெளிநாட்டு போகச்சொன்னபோது

நானோ மறுத்தேன்..மாட்டேன் என்றேன்...

ஆனால்....

நீயோ போகச்சொன்னாய்..

எத்தனை ஆண்டுகள் ஆனாலும்

உங்களுக்காக நான் காத்திருப்பேன் என்று சொல்லி

அந்த நம்பிக்கையில் நானும் சென்றேன் ..

எனக்காக காத்திருப்பேன் ...

என்று சொன்னதை நம்பி....

வருடங்கள் மூன்று முடிந்தன..

எனக்காக காத்திருக்கும் உன்னைப்பார்க்க

ஆவலோடு கிளம்பி டிக்கெட் பதிவு செய்தேன் ..

பதிவு செய்த தேதியை உனக்கு தெரிவிக்க

நான் உன்னை தொடர்பு கொண்டேன் தொலைபேசியில்

பதிலுக்கு நீயும் சொன்னாய் ..!!!

நீங்கள் பதிவு செய்த அதே தேதியில்

எனக்கும் பதிவு திருமணமென்று ...


?!!


?!!!

?!!!!

?!!!!!


?!!!!!!


எனக்கு என்று சொன்ன நீ

நம் பெற்றோரிடம் நம் காதலை பற்றி சொல்லி

நம் இருவருக்கும் பதிவு திருமணதிற்கு

சம்மதம் வாங்கிய விஷயத்தை மட்டும்

என்னிடம் மறைத்து விட்டாயேடி கள்ளி ...




புதன், 4 ஆகஸ்ட், 2010

உனக்குள் நான்(ஆக)வர காத்திருக்கிறேன்

ஒரு நாள் அதிகாலை வேளையில்

வேப்பமரத்து நிழலில்

தோழிகளின் சூழலின் நடுவில் நான் .....

நீ மட்டும் இல்லாமல் இருந்தாய்

எனக்கோ தோழிகளின் பேச்சில்

கவனம் இல்லை ....

என் கவனம் எல்லாம் உன்னை

தேடுவதில் மட்டுமே இருந்த்தது ...

என் முகம் மட்டும் புன்னகையை

தோழிகளுக்கு தந்திருந்தது ....

என் இரு விழிகளும் உன்னை

வலை வீசி தேடித்திரிந்தன.....

கண் இமைக்கும் நேரத்தில் நீ

என் முன் வந்து நின்றாய்.....

நேற்று வரை என் மனதில்

மட்டுமே பதிந்திருந்த நீ

இன்று தான் என் இரு விழியிலும் பதிந்தாய் .....

ஆனால் நானோ இன்று தான்

உன் இரு விழிகளில் பதிந்திருக்கிறேன் ...

உன் இரு விழிகளில் பதிந்த நான்

என்று உன்

(மனதில்)பதியப்போகிறேன்..

என் வாழ்நாள் முழுவதும் உனக்காக

(உன்)இதயத்தின் அழைப்பிற்காக

உனக்குள் நான்(ஆக)வர

காத்திருக்கிறேன் கண்ணே (மகாலெட்சுமி).......