திங்கள், 26 ஜூலை, 2010

வாழ்க்கைத்துணை ...

அன்று உன் ஆள்க்காட்டி விரலைக்காட்டி

நீ தான் என் வாழ்க்கை என்றாய் ...!!!!!

இன்று அதே ஆள்க்காட்டி விரலைக்காட்டி

அதோ அவர் தான் என் வாழ்க்கைத்துணை

என்கிறாய்!!!!!!!....

தூரத்தில் நின்றிருந்த ஒரு

ஆடவனைக்கட்டி .....!!!!!!

திங்கள், 19 ஜூலை, 2010

சுவாசிக்கிறேன் ....

"நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்றில்

உன் நினைவுகளை உள்ளிழுத்து

என் நினைவுகளை காற்றில் கலந்துவிடுகிறேன்

என் நினைவுகளை நீ

சுவாசிக்க வேண்டுமென்பதற்காக!!!!!

செவ்வாய், 13 ஜூலை, 2010

உன்னைச்சுற்றும் வாலிபனாக!



சந்தோசமாக இருந்தேன் நானும்

ஊரைச்சுற்றும் வாலிபனாக !!!

ஏனோ வந்தாய்!!

காதலிக்கிறேன் என்றாய்!!

அன்று முதல்

ஊரைச்சுற்றுவதை நிறுத்திவிட்டு

உன்னை சுற்றத் தொடங்கிவிட்டேன்......

செவ்வாய், 6 ஜூலை, 2010

உன் அரவணைப்பில் என்றும் நான்....




என்னை என் தாய் அனாதையாக்கினால்


என் ஏழு வயதில் ....!!!!!


அன்று என்னை அரவணைக்க ஆள்

இல்லாமல் தவியாய் தவித்தேன் .......

என் சந்தோசங்களையும்,


என் துக்கங்களையும் சொல்லிக்கொண்டு


சாய்வதற்கு ஒரு தோள் இல்லாமல்


தவியாய் தவித்தேன் .......


ஆனால் ?!!!


இன்றோ நீ இருக்கிறாய் !!


எனக்காக உன் தோள் கொடுக்கும்


தோழியாக !!!!


என்னை அரவணைக்கும்


தாயாக !!!!!இனி


உன் அரவணைப்பில் என்றும் நான்........

தவம் புரிகின்றாயோ தாயே?!!!

தாயே ஏன் என்னை அனாதையாக்கினாய்?!!!

உன் பிரிவால் வாடும் உன் மகனுக்கு என்ன

பதில் கூறப்போகிறாய்?!!!!

உன் முகம் என் மனதில் முத்திரை

ஆவதற்கு முன் நீ ஏன் சித்திரமனாய்?!!!!

பதினெட்டு வருஷம் தவமிருந்து

நீ பெற்றெடுத்த தவ புதல்வர்களை

விட்டுவிட்டு மீண்டும் தவம் புரிகின்றாயோ?!!!!

உன் தவப் புதல்வர்கள் நீடோடி


வாழ்வதற்க்கா??!!!!

என்றும் உங்கள் நினைவில் !!!!!!


முருகேசன்&கணேசன் .....

கனவிலும் உன்னுடன்


நள்ளிரவில் கனவுகளில்

உன்னோடு பேசிக்கொண்டும்

சிரித்துக்கொண்டும்

இருக்கின்றேனாம்

காலையில் நண்பர்கள்

சொல்லுகிறார்கள்...........



உன்னோடு தொலைபேசியில்

எப்போதும் பேசிக்கொண்டிருப்பதால்

சில நேரம் நள்ளிரவில்(கனவில்)

பேசிக்கொண்டிருந்தாலும்

என் நண்பர்கள் கண்டு கொள்வதில்லை

விழித்துக்கொண்டிருக்கிறேன் என்று

நினைத்து...........


உறக்கத்தில் கூட

முத்தமிடுகிறேன்

என் தலையணைகளை

நீயாக நினைத்து........