புதன், 21 ஏப்ரல், 2010

காதலின் மென்மை!!!!!!!









காதல் மென்மையானது
பூக்களைப்போல,
அந்த பூக்கள் வாடாமல்
பெற்றோர்கள்
வாழவைக்க
வேண்டும்
காதலர்களை!
பூக்களாக நினைத்து.......!!!!!!!!!



திங்கள், 19 ஏப்ரல், 2010

வாழ்க்கை

வாழ்க்கை தான் எத்தனை

விசித்திரமானது அழவைக்கிற

கோபத்தையும் ,மகிழவைக்கிற

சிரிப்பையும் உன் ஒருவனிடமே

தந்திருக்கிறது...............

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

பார்வையா?பள்ளமா?



உன் ஒரு நொடிப்பார்வையில் விழுந்த என்னால்

எழவே முடியவில்லையே?!இது

பார்வையா?இல்ல பள்ளமா?

பாதுகாப்பு வேலி!



உன்னுடைய அந்தப்பார்வைகள் தான்

எனக்கு பாதுகாப்பு வேலி!

மற்ற பெண்களின் பார்வைகள் என்னை

கவராமல் இருக்க!!!!!!

கண்ணீர்


உன் கண்களுக்குள் மீன்களாக

நீந்தித் திரிபவன் நான்......

உன் கண்ணீர் என்னும் அலைகளால்

என்னைக் கொன்று

கரை ஒதுக்கிவிடதே!கண்ணே !!!!!!!!!!

திருடாதே!


உன் கண்களுக்கு ஒரு வேலி இடு!

இரவெல்லாம் என் தூக்கத்தை

திருடாமல் இருக்க!?!

திருடியது என் தூக்கத்தை மட்டுமல்ல

என் இதயத்தையும் சேர்த்து தான் ???

உன் விழிகளின் பார்வையால் ..........!!!!!!!!!

உன்னைப்பார்க்க !


என் கண் இமைகள்

ரெண்டும் துடிக்கிறது!

உன்னை

பார்க்கவேண்டுமென்று !

ஒவ்வொரு நாளும் தவறாமல்!

அமாவாசை


நிலாவின் அழகை பார்த்து

நட்சத்திரங்கள் தினமும்

ரசித்துக்கொண்டிருந்ததாம் !!!!!

ஒரு நாள்?!!!!!

நிலாவை காணவில்லை?!

அமாவாசை அன்று!!

அன்று உன் உலாவைக்கண்டு

நட்சத்திரங்கள் இவளின்

அழகைக்கண்டு நிலா

வெட்கத்தில் ஓடி ஒளிந்து கொண்டது

என்றதாம் .............!!!!!!!!!!!!!!!!!!!!

ஐம்புலன்கள்




உன் மேனியின் மென்மை கண்டு

உன் பாதம் தாங்கிக்கொள்கிறது

நிலம்.

*
உன் உடல் சிலிர்க்க மழையால்

உன்னை அபிசேகம் செய்கிறது

நீர்.....

*
உன் மென்மையான கண்ணங்களை

முத்தமிடுவதற்க்காக வந்துபோகிறது

தென்றல் காற்று.....

*
உன் பார்வை தன்னை விட

சக்தி வாய்ந்தது என்பதை உன்னை

சுற்றும் வாலிபர்களை பார்த்து

தெரிந்துகொள்ளும் நெருப்பு.....

*
உன் அழகை ரசிப்பதற்காக

இரவில் பல்லாயிரக்கணக்கான

நட்சத்திரத்தை அனுப்பி வைக்கிறது

ஆகாயம்.......


முகப்பரு


என் கண்ணத்தில் நீ கொடுக்கும்

முத்தத்திற்காக வந்துபோகிறது

இந்த முகப்பரு.!!!!!!!!!!

வெட்கம்


ஒரு இரவு நேரம் கடற்கரையோரம்

நாம் இருவரும் அமர்ந்திருக்கும் போது

நிலா உன் அழகைகண்டு

வெட்கத்தில் மறைந்துகொண்டது

மேகதிற்கு நடுவில் ?!!!!!!!!!!!!!

தவிப்பு


பகலெல்லாம் உன் நினைவோடு ,

இரவெல்லாம் உன் நிழலோடு,

நிஜமாக எப்போது உன்னோடு?

புதன், 14 ஏப்ரல், 2010

காதல் பரிசுகள் கவிதையாக!

துடிப்பது உனக்காக!!!!!!!!!

நீ கொடுத்த காலதைக்காட்டும் கைக்கெடிகாரம்

காலதைக்காட்டாமல் துடிப்பதை நிறுத்திவிட்டது
!

ஆனால்

என் இதயம் துடிப்பதை நிறுத்தவில்லை உனக்காக!

என்

மகாலெட்சுமி க்காக.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

என் வாழ்கை வரலாறு

என் பெயர் முருகேசன் .சொந்த ஊர் ராமநாதபுரம் (மாவட்டம்)சேமன்வயல்(கிராமம்).என் அப்பா ராமு ,அம்மா மாரியம்மாள் ,அண்ணன் கணேசன் .அப்பா கொஞ்சம் தண்ணி அடிப்பார் (கொஞ்சம் இல்ல ரொம்ப ).அதனால அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்ட வரும் .ஆனா அம்மா ரொம்ப சாது .எவ்வளவு சண்ட போட்டாலும் ,அடிச்சாலும் யாரிடமும் சொல்லமாட்டாங்க.அப்பாவோட வருமானத்த எதிர்பார்க்க மாட்டாங்க .காலைல சீக்கிரமே எந்திருச்சு ,எங்கள பள்ளிகூடத்துக்கு அணிப்பிட்டு தொண்டி(சிட்டி)க்கு பால் கொண்டு போவாங்க ,மாலைல நானும் என் அண்ணனும் வீட்டுக்கு வரும்போது அம்மா வாசல்ல எதிர்பார்த்துட்டு இருப்பாங்க ,நாங்க வந்தவுடனே ட்ரெஸ் மாத்திட்டு சாப்பாடு ரெடியா தட்டுல இருக்கும்.நான் சீக்கிரமே சாப்பிட்ருவேன்,ஆனா என் அண்ணன் அடி வாங்காம ஒரு நாள் கூட சாப்பிட்டதே இல்ல .காலைலும் துளசி சாறு ஒரு டம்ளரும் ,நாட்டு கோழி முட்டையும் தருவாங்க ,வழக்கம் போல அண்ணன் அடி வாங்கிட்டுதான் குடிப்பான் .நான் நல்ல குண்டா இருப்பேன் .அண்ணன் ஒல்லியா கருப்பா இருப்பான். இப்படியே ஏழு வருஷம் சந்தோசமா லைப் போச்சு .பதினெட்டு வருசமா குழந்தை இல்லாததால ரொம்ப சந்தோசமா இருந்தாங்க அம்மா .திடீர்னு ஒரு நாள் நாங்க பள்ளிகூடம் போயிட்டு சாயங்காலம் வரும்போது அம்மா வெளியில இல்ல .நான் வீட்டுக்குள்ள போய் பார்த்தேன் .அம்மா மயக்கமா படுத்திருந்தாங்க ,அப்புறம் தான் தெரிஞ்சுது விஷம் சப்பிட்டுருக்கங்கன்னு ,உடனே எல்லாரும் என்ன என்னவோ மருந்து கொடுத்தாங்க ,சரியா வரலே அப்போ பசெல்லாம் இல்ல .உடனே வண்டியில கொண்டு போனாங்க ,ஆனா அம்மா வழியிலேயே இறந்துட்டாங்க .நான் அப்போ சின்ன பையன் .ரொம்ப அழுதேன் ,அப்படியே ரெண்டு வருஷம் போச்சு அப்பாதான் ரெண்டு வருசமா சமைச்சு போட்டாரு .அப்போ சந்தோசமா இருந்தோம் .ஆனா அதுக்கப்புறம் சொந்தகாரங்க யாரும் சரியாய் கண்டுக்கல ,ஆனா அப்பா கிட்ட எதையோ சொல்லி ரெண்டாவது கல்யாணம் பண்ணிவசுட்டாங்க.நான் சந்தோசமா கல்யாணத்துக்கு கிளம்பிட்டேன் .அண்ணன் வரமட்டேனுட்டான் .அப்புறம் கல்யாணம் முடிஞ்சுது.சித்திக்கு ரெண்டு பொண்ணு.ரேணுகா,ராதிகா,ரொம்ப பாசமா இருப்போம் நானும் என் அண்ணனும் .ஆனா அப்பா இன்னும் மாறவே இல்ல!நானும் என் அண்ணனும் துபாயில்-இருக்கோம்.மாசம் முப்பதாயிரம் வருமானம் வருது . வீடு கட்டிக்கிட்டு இருக்கோம்.
இப்போ எனக்கு என் அண்ணன் கனேசன விட எல்லா வகையிலும் உதவி செய்யுறது தாஸ் (நண்பர்)அண்ணன் தான்...துபாய் ல வந்து ஒரே இடத்துல வேலை செய்தோம்..நண்பர்களா பழகி இப்போ அண்ணன் தம்பி உறவு மாதிரி (இல்ல)அண்ணன் தம்பி தான்...என்னோட எல்லா விசயமும் அவருக்கு தெரியாம இருக்காது...அவ்ளோ க்ளோசா இருப்போம்,,என் அண்ணன் மலேசியா-ல நாலு வருஷம் வேலை பார்த்தான் ஆனா ஒரு சட்டை கூட எடுத்து கொடுக்கல...ஆனா இவரு வருஷம் வருஷம் என் பிறந்த நாளுக்கு ட்ரெஸ் எடுத்து கொடுதிருவார்...என்ன ரொம்ப நல்லா பாத்துக்க கூடிய ஒரு நல்ல அண்ணன்....

செவ்வாய், 6 ஏப்ரல், 2010