ஞாயிறு, 26 டிசம்பர், 2010

நண்பேண்டா....




ஒரு தாய் வயிற்றில் நாங்கள் பிறக்கவில்லை

ஆனால் பிறப்பால் நாங்கள் பிரிக்கப்படவில்லை.....

ஒரே மதத்திலும் பிறக்கவில்லை

ஆனால் மதத்தால் நாங்கள் பிரிக்கப்படவில்லை...

எங்கேயோ பிறந்தோம்,

எங்கேயோ வளர்ந்தோம்

அயல்நாட்டில் ஒன்றானோம்.....

உடன்பிறந்தவன் எனக்கு நண்பனாக இருக்கவில்லை

ஆனால்

நண்பன் உடன்பிறந்தவனாக இருக்கின்றான்...

அன்புள்ள நண்பர்(அண்ணன்)தாஸுக்கு....

செவ்வாய், 30 நவம்பர், 2010

கோபம்

நீ என்னை கோபமாக திட்டுவது கூட

சுகமாகத்தான் இருக்கிறது...

என் தெரியுமா?!!!!!
!!!...
!!!!...
!!!!!!!....
நீ அப்போது திட்டியதை நினைத்து

நான் இப்போது சிரித்துக்கொண்டிருக்கிறேன்....

என் மனசும் என் கண்களும்..

என் மனசுக்கு மகாவிடம்

பேசவேண்டுமென்று ஆசை...

என் கண்களுக்கு முருகேசனை

தூங்கவைக்க வேண்டுமென்று ஆசை...

ஒன்றை விட்டு கொடுத்தால் தானே ..

மற்றொன்றை அடைய முடியும்...

அதனால் தான் ...

என் உறக்கத்தை விட்டு கொடுத்து விட்டேன்....

சுகமான காதல் வலி


உன்னோடு பேசாத இரவும்


எனக்கு இரவாக இல்லை..


உன்னோடு பேசிய இரவால்


எனக்கு பகலும் பகலாக இல்லை...

...

....

உறக்கமில்லாமல்.....


உனக்காக விழித்திருக்கும்


என் விழிகளுக்கு இரவில் வலி தெரியவில்லை...


உன்னோடு பேசுவதால்....


ஆனால் ......

பகலில் தான் தெரிகிறது வலி....


ஆனாலும்.....


சுகமான வலியாக....!!!!!




புதன், 25 ஆகஸ்ட், 2010

விபத்து


நீ சாலையை கடக்கும் போது


உன் அழகைக்கண்டு


பேருந்து உன்னை என்னிடம்


இருந்து பறித்து தனக்கு


சொந்தமாக்கிக்கொண்டதோ?!!!!


செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

படைத்தான் பிரம்மன் உன்னை...

பிரம்மன் படைப்பில்

உன் இரு இதழ்களை மட்டும்

ஏன் வில்லாக படைத்தான்

வாலிபர்களின் இதயத்தில்

அம்பு எய்வதற்கா?


வில் வித்தையில் சிறந்தவன்

அர்ச்சுனன் ...அந்த

அர்ச்சுனன் உன்னை பார்த்தால்

உன் இதழ்களை வில்லாக எடுத்து

உன் கண்களை மீணாக நினைத்து

அம்பு எய்திருப்பான்....

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

காதலன் இங்கே ...காதலி அங்கே...

காதலன் இங்கே ...காதலி அங்கே...

என் வீட்டார் வெளிநாட்டு போகச்சொன்னபோது

நானோ மறுத்தேன்..மாட்டேன் என்றேன்...

ஆனால்....

நீயோ போகச்சொன்னாய்..

எத்தனை ஆண்டுகள் ஆனாலும்

உங்களுக்காக நான் காத்திருப்பேன் என்று சொல்லி

அந்த நம்பிக்கையில் நானும் சென்றேன் ..

எனக்காக காத்திருப்பேன் ...

என்று சொன்னதை நம்பி....

வருடங்கள் மூன்று முடிந்தன..

எனக்காக காத்திருக்கும் உன்னைப்பார்க்க

ஆவலோடு கிளம்பி டிக்கெட் பதிவு செய்தேன் ..

பதிவு செய்த தேதியை உனக்கு தெரிவிக்க

நான் உன்னை தொடர்பு கொண்டேன் தொலைபேசியில்

பதிலுக்கு நீயும் சொன்னாய் ..!!!

நீங்கள் பதிவு செய்த அதே தேதியில்

எனக்கும் பதிவு திருமணமென்று ...


?!!


?!!!

?!!!!

?!!!!!


?!!!!!!


எனக்கு என்று சொன்ன நீ

நம் பெற்றோரிடம் நம் காதலை பற்றி சொல்லி

நம் இருவருக்கும் பதிவு திருமணதிற்கு

சம்மதம் வாங்கிய விஷயத்தை மட்டும்

என்னிடம் மறைத்து விட்டாயேடி கள்ளி ...




புதன், 4 ஆகஸ்ட், 2010

உனக்குள் நான்(ஆக)வர காத்திருக்கிறேன்

ஒரு நாள் அதிகாலை வேளையில்

வேப்பமரத்து நிழலில்

தோழிகளின் சூழலின் நடுவில் நான் .....

நீ மட்டும் இல்லாமல் இருந்தாய்

எனக்கோ தோழிகளின் பேச்சில்

கவனம் இல்லை ....

என் கவனம் எல்லாம் உன்னை

தேடுவதில் மட்டுமே இருந்த்தது ...

என் முகம் மட்டும் புன்னகையை

தோழிகளுக்கு தந்திருந்தது ....

என் இரு விழிகளும் உன்னை

வலை வீசி தேடித்திரிந்தன.....

கண் இமைக்கும் நேரத்தில் நீ

என் முன் வந்து நின்றாய்.....

நேற்று வரை என் மனதில்

மட்டுமே பதிந்திருந்த நீ

இன்று தான் என் இரு விழியிலும் பதிந்தாய் .....

ஆனால் நானோ இன்று தான்

உன் இரு விழிகளில் பதிந்திருக்கிறேன் ...

உன் இரு விழிகளில் பதிந்த நான்

என்று உன்

(மனதில்)பதியப்போகிறேன்..

என் வாழ்நாள் முழுவதும் உனக்காக

(உன்)இதயத்தின் அழைப்பிற்காக

உனக்குள் நான்(ஆக)வர

காத்திருக்கிறேன் கண்ணே (மகாலெட்சுமி).......

திங்கள், 26 ஜூலை, 2010

வாழ்க்கைத்துணை ...

அன்று உன் ஆள்க்காட்டி விரலைக்காட்டி

நீ தான் என் வாழ்க்கை என்றாய் ...!!!!!

இன்று அதே ஆள்க்காட்டி விரலைக்காட்டி

அதோ அவர் தான் என் வாழ்க்கைத்துணை

என்கிறாய்!!!!!!!....

தூரத்தில் நின்றிருந்த ஒரு

ஆடவனைக்கட்டி .....!!!!!!

திங்கள், 19 ஜூலை, 2010

சுவாசிக்கிறேன் ....

"நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்றில்

உன் நினைவுகளை உள்ளிழுத்து

என் நினைவுகளை காற்றில் கலந்துவிடுகிறேன்

என் நினைவுகளை நீ

சுவாசிக்க வேண்டுமென்பதற்காக!!!!!

செவ்வாய், 13 ஜூலை, 2010

உன்னைச்சுற்றும் வாலிபனாக!



சந்தோசமாக இருந்தேன் நானும்

ஊரைச்சுற்றும் வாலிபனாக !!!

ஏனோ வந்தாய்!!

காதலிக்கிறேன் என்றாய்!!

அன்று முதல்

ஊரைச்சுற்றுவதை நிறுத்திவிட்டு

உன்னை சுற்றத் தொடங்கிவிட்டேன்......

செவ்வாய், 6 ஜூலை, 2010

உன் அரவணைப்பில் என்றும் நான்....




என்னை என் தாய் அனாதையாக்கினால்


என் ஏழு வயதில் ....!!!!!


அன்று என்னை அரவணைக்க ஆள்

இல்லாமல் தவியாய் தவித்தேன் .......

என் சந்தோசங்களையும்,


என் துக்கங்களையும் சொல்லிக்கொண்டு


சாய்வதற்கு ஒரு தோள் இல்லாமல்


தவியாய் தவித்தேன் .......


ஆனால் ?!!!


இன்றோ நீ இருக்கிறாய் !!


எனக்காக உன் தோள் கொடுக்கும்


தோழியாக !!!!


என்னை அரவணைக்கும்


தாயாக !!!!!இனி


உன் அரவணைப்பில் என்றும் நான்........

தவம் புரிகின்றாயோ தாயே?!!!

தாயே ஏன் என்னை அனாதையாக்கினாய்?!!!

உன் பிரிவால் வாடும் உன் மகனுக்கு என்ன

பதில் கூறப்போகிறாய்?!!!!

உன் முகம் என் மனதில் முத்திரை

ஆவதற்கு முன் நீ ஏன் சித்திரமனாய்?!!!!

பதினெட்டு வருஷம் தவமிருந்து

நீ பெற்றெடுத்த தவ புதல்வர்களை

விட்டுவிட்டு மீண்டும் தவம் புரிகின்றாயோ?!!!!

உன் தவப் புதல்வர்கள் நீடோடி


வாழ்வதற்க்கா??!!!!

என்றும் உங்கள் நினைவில் !!!!!!


முருகேசன்&கணேசன் .....

கனவிலும் உன்னுடன்


நள்ளிரவில் கனவுகளில்

உன்னோடு பேசிக்கொண்டும்

சிரித்துக்கொண்டும்

இருக்கின்றேனாம்

காலையில் நண்பர்கள்

சொல்லுகிறார்கள்...........



உன்னோடு தொலைபேசியில்

எப்போதும் பேசிக்கொண்டிருப்பதால்

சில நேரம் நள்ளிரவில்(கனவில்)

பேசிக்கொண்டிருந்தாலும்

என் நண்பர்கள் கண்டு கொள்வதில்லை

விழித்துக்கொண்டிருக்கிறேன் என்று

நினைத்து...........


உறக்கத்தில் கூட

முத்தமிடுகிறேன்

என் தலையணைகளை

நீயாக நினைத்து........

செவ்வாய், 25 மே, 2010

இரு வரி கவிதை




உன் இதழ்களைப்

பார்த்து தான் நான்

தெரிந்துகொண்டேன் !!!!

ரோஜா இதழ்களை

விட உன் இதழ்கள்

மென்மையானதென்று..........!!!!!!!

எனக்காக

இந்த இதழ்கள்

சொல்லும் இரு வரிக்கவிதை

முத்தமிடு என்னை(kiss me)........

திங்கள், 24 மே, 2010

காதல் ரோஜா








எனக்காக நீ


வாங்கித்தந்த


ரோஜா மலர்கள்


வாடாமல் இருக்கிறது


இதமாக என்


இதயத்தில்.........

புதன், 21 ஏப்ரல், 2010

காதலின் மென்மை!!!!!!!









காதல் மென்மையானது
பூக்களைப்போல,
அந்த பூக்கள் வாடாமல்
பெற்றோர்கள்
வாழவைக்க
வேண்டும்
காதலர்களை!
பூக்களாக நினைத்து.......!!!!!!!!!



திங்கள், 19 ஏப்ரல், 2010

வாழ்க்கை

வாழ்க்கை தான் எத்தனை

விசித்திரமானது அழவைக்கிற

கோபத்தையும் ,மகிழவைக்கிற

சிரிப்பையும் உன் ஒருவனிடமே

தந்திருக்கிறது...............

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

பார்வையா?பள்ளமா?



உன் ஒரு நொடிப்பார்வையில் விழுந்த என்னால்

எழவே முடியவில்லையே?!இது

பார்வையா?இல்ல பள்ளமா?

பாதுகாப்பு வேலி!



உன்னுடைய அந்தப்பார்வைகள் தான்

எனக்கு பாதுகாப்பு வேலி!

மற்ற பெண்களின் பார்வைகள் என்னை

கவராமல் இருக்க!!!!!!

கண்ணீர்


உன் கண்களுக்குள் மீன்களாக

நீந்தித் திரிபவன் நான்......

உன் கண்ணீர் என்னும் அலைகளால்

என்னைக் கொன்று

கரை ஒதுக்கிவிடதே!கண்ணே !!!!!!!!!!

திருடாதே!


உன் கண்களுக்கு ஒரு வேலி இடு!

இரவெல்லாம் என் தூக்கத்தை

திருடாமல் இருக்க!?!

திருடியது என் தூக்கத்தை மட்டுமல்ல

என் இதயத்தையும் சேர்த்து தான் ???

உன் விழிகளின் பார்வையால் ..........!!!!!!!!!

உன்னைப்பார்க்க !


என் கண் இமைகள்

ரெண்டும் துடிக்கிறது!

உன்னை

பார்க்கவேண்டுமென்று !

ஒவ்வொரு நாளும் தவறாமல்!

அமாவாசை


நிலாவின் அழகை பார்த்து

நட்சத்திரங்கள் தினமும்

ரசித்துக்கொண்டிருந்ததாம் !!!!!

ஒரு நாள்?!!!!!

நிலாவை காணவில்லை?!

அமாவாசை அன்று!!

அன்று உன் உலாவைக்கண்டு

நட்சத்திரங்கள் இவளின்

அழகைக்கண்டு நிலா

வெட்கத்தில் ஓடி ஒளிந்து கொண்டது

என்றதாம் .............!!!!!!!!!!!!!!!!!!!!

ஐம்புலன்கள்




உன் மேனியின் மென்மை கண்டு

உன் பாதம் தாங்கிக்கொள்கிறது

நிலம்.

*
உன் உடல் சிலிர்க்க மழையால்

உன்னை அபிசேகம் செய்கிறது

நீர்.....

*
உன் மென்மையான கண்ணங்களை

முத்தமிடுவதற்க்காக வந்துபோகிறது

தென்றல் காற்று.....

*
உன் பார்வை தன்னை விட

சக்தி வாய்ந்தது என்பதை உன்னை

சுற்றும் வாலிபர்களை பார்த்து

தெரிந்துகொள்ளும் நெருப்பு.....

*
உன் அழகை ரசிப்பதற்காக

இரவில் பல்லாயிரக்கணக்கான

நட்சத்திரத்தை அனுப்பி வைக்கிறது

ஆகாயம்.......


முகப்பரு


என் கண்ணத்தில் நீ கொடுக்கும்

முத்தத்திற்காக வந்துபோகிறது

இந்த முகப்பரு.!!!!!!!!!!

வெட்கம்


ஒரு இரவு நேரம் கடற்கரையோரம்

நாம் இருவரும் அமர்ந்திருக்கும் போது

நிலா உன் அழகைகண்டு

வெட்கத்தில் மறைந்துகொண்டது

மேகதிற்கு நடுவில் ?!!!!!!!!!!!!!

தவிப்பு


பகலெல்லாம் உன் நினைவோடு ,

இரவெல்லாம் உன் நிழலோடு,

நிஜமாக எப்போது உன்னோடு?

புதன், 14 ஏப்ரல், 2010

காதல் பரிசுகள் கவிதையாக!

துடிப்பது உனக்காக!!!!!!!!!

நீ கொடுத்த காலதைக்காட்டும் கைக்கெடிகாரம்

காலதைக்காட்டாமல் துடிப்பதை நிறுத்திவிட்டது
!

ஆனால்

என் இதயம் துடிப்பதை நிறுத்தவில்லை உனக்காக!

என்

மகாலெட்சுமி க்காக.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

என் வாழ்கை வரலாறு

என் பெயர் முருகேசன் .சொந்த ஊர் ராமநாதபுரம் (மாவட்டம்)சேமன்வயல்(கிராமம்).என் அப்பா ராமு ,அம்மா மாரியம்மாள் ,அண்ணன் கணேசன் .அப்பா கொஞ்சம் தண்ணி அடிப்பார் (கொஞ்சம் இல்ல ரொம்ப ).அதனால அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்ட வரும் .ஆனா அம்மா ரொம்ப சாது .எவ்வளவு சண்ட போட்டாலும் ,அடிச்சாலும் யாரிடமும் சொல்லமாட்டாங்க.அப்பாவோட வருமானத்த எதிர்பார்க்க மாட்டாங்க .காலைல சீக்கிரமே எந்திருச்சு ,எங்கள பள்ளிகூடத்துக்கு அணிப்பிட்டு தொண்டி(சிட்டி)க்கு பால் கொண்டு போவாங்க ,மாலைல நானும் என் அண்ணனும் வீட்டுக்கு வரும்போது அம்மா வாசல்ல எதிர்பார்த்துட்டு இருப்பாங்க ,நாங்க வந்தவுடனே ட்ரெஸ் மாத்திட்டு சாப்பாடு ரெடியா தட்டுல இருக்கும்.நான் சீக்கிரமே சாப்பிட்ருவேன்,ஆனா என் அண்ணன் அடி வாங்காம ஒரு நாள் கூட சாப்பிட்டதே இல்ல .காலைலும் துளசி சாறு ஒரு டம்ளரும் ,நாட்டு கோழி முட்டையும் தருவாங்க ,வழக்கம் போல அண்ணன் அடி வாங்கிட்டுதான் குடிப்பான் .நான் நல்ல குண்டா இருப்பேன் .அண்ணன் ஒல்லியா கருப்பா இருப்பான். இப்படியே ஏழு வருஷம் சந்தோசமா லைப் போச்சு .பதினெட்டு வருசமா குழந்தை இல்லாததால ரொம்ப சந்தோசமா இருந்தாங்க அம்மா .திடீர்னு ஒரு நாள் நாங்க பள்ளிகூடம் போயிட்டு சாயங்காலம் வரும்போது அம்மா வெளியில இல்ல .நான் வீட்டுக்குள்ள போய் பார்த்தேன் .அம்மா மயக்கமா படுத்திருந்தாங்க ,அப்புறம் தான் தெரிஞ்சுது விஷம் சப்பிட்டுருக்கங்கன்னு ,உடனே எல்லாரும் என்ன என்னவோ மருந்து கொடுத்தாங்க ,சரியா வரலே அப்போ பசெல்லாம் இல்ல .உடனே வண்டியில கொண்டு போனாங்க ,ஆனா அம்மா வழியிலேயே இறந்துட்டாங்க .நான் அப்போ சின்ன பையன் .ரொம்ப அழுதேன் ,அப்படியே ரெண்டு வருஷம் போச்சு அப்பாதான் ரெண்டு வருசமா சமைச்சு போட்டாரு .அப்போ சந்தோசமா இருந்தோம் .ஆனா அதுக்கப்புறம் சொந்தகாரங்க யாரும் சரியாய் கண்டுக்கல ,ஆனா அப்பா கிட்ட எதையோ சொல்லி ரெண்டாவது கல்யாணம் பண்ணிவசுட்டாங்க.நான் சந்தோசமா கல்யாணத்துக்கு கிளம்பிட்டேன் .அண்ணன் வரமட்டேனுட்டான் .அப்புறம் கல்யாணம் முடிஞ்சுது.சித்திக்கு ரெண்டு பொண்ணு.ரேணுகா,ராதிகா,ரொம்ப பாசமா இருப்போம் நானும் என் அண்ணனும் .ஆனா அப்பா இன்னும் மாறவே இல்ல!நானும் என் அண்ணனும் துபாயில்-இருக்கோம்.மாசம் முப்பதாயிரம் வருமானம் வருது . வீடு கட்டிக்கிட்டு இருக்கோம்.
இப்போ எனக்கு என் அண்ணன் கனேசன விட எல்லா வகையிலும் உதவி செய்யுறது தாஸ் (நண்பர்)அண்ணன் தான்...துபாய் ல வந்து ஒரே இடத்துல வேலை செய்தோம்..நண்பர்களா பழகி இப்போ அண்ணன் தம்பி உறவு மாதிரி (இல்ல)அண்ணன் தம்பி தான்...என்னோட எல்லா விசயமும் அவருக்கு தெரியாம இருக்காது...அவ்ளோ க்ளோசா இருப்போம்,,என் அண்ணன் மலேசியா-ல நாலு வருஷம் வேலை பார்த்தான் ஆனா ஒரு சட்டை கூட எடுத்து கொடுக்கல...ஆனா இவரு வருஷம் வருஷம் என் பிறந்த நாளுக்கு ட்ரெஸ் எடுத்து கொடுதிருவார்...என்ன ரொம்ப நல்லா பாத்துக்க கூடிய ஒரு நல்ல அண்ணன்....

செவ்வாய், 6 ஏப்ரல், 2010