ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

ஐம்புலன்கள்




உன் மேனியின் மென்மை கண்டு

உன் பாதம் தாங்கிக்கொள்கிறது

நிலம்.

*
உன் உடல் சிலிர்க்க மழையால்

உன்னை அபிசேகம் செய்கிறது

நீர்.....

*
உன் மென்மையான கண்ணங்களை

முத்தமிடுவதற்க்காக வந்துபோகிறது

தென்றல் காற்று.....

*
உன் பார்வை தன்னை விட

சக்தி வாய்ந்தது என்பதை உன்னை

சுற்றும் வாலிபர்களை பார்த்து

தெரிந்துகொள்ளும் நெருப்பு.....

*
உன் அழகை ரசிப்பதற்காக

இரவில் பல்லாயிரக்கணக்கான

நட்சத்திரத்தை அனுப்பி வைக்கிறது

ஆகாயம்.......


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக